ஓரமாக ஒதுங்கி சென்ற பைக்... பின்னால் வந்து அடித்து தூக்கிய கார்... பதறவைக்கும் காட்சிகள்

x

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சொகுசு காரில் வந்தவர்கள் தாரபுரத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் வினோத் என்பது தெரியவந்தது.

விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்