ஷோரூமில் போதையில் மயங்கி கிடந்த இளம் பெண்... நேரில் சென்று பார்த்து அதிர்ந்து போன கணவன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் 27 வயது இளம் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அந்த ஷோரூம் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், வேலை இருப்பதாக கூறி ஷோரூம் நிர்வாகம் அந்த பெண்ணை வரவழைத்த‌தாக தெரிகிறது.

இந்நிலையில், பெண்ணின் கணவர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, சரியாக பதில் அளிக்காத‌தால் சந்தேகம் அடைந்த கணவர், மனைவி பணிபுரியும் ஷோரூம்க்கு சென்றுள்ளார்.

அங்கு குடிபோதையில் மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், செங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்ததும் போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், உடன் பணியாற்றும் ஆண் பணியாளர் ஒருவர், தன்னை ஏமாற்றி மது வாங்கி கொடுத்து மானபங்கம் செய்ய முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த ஆண் பணியாளரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண் தான், மது வாங்கி தருமாறு வலியுறுத்தியதாகவும், அவரின் விருப்பத்தின் பேரிலேயே மது வாங்கி கொடுத்த‌தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், அந்த இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகன ஷோரூமில் இளம் பெண் போதையில் மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்