கன்னியாகுமரியில் கடை முன் நிறுத்தப்பட்ட பைக் மாயம் - சிசிடிவி காட்சி வெளியீடு

x

கன்னியாகுமரியில் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

அருமனை அருகே மேலத்தெருவில் செயல்பட்டு வரும் இறைச்சி கடையில் பணியாற்றி வரும் நபர் ஒருவர், தன் கடை முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதைக்​ கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சியை ஆராயும் போது நள்ளிரவில் மர்ம நபர்கள் தன் வாகனத்தை எடுத்து செல்வதை கண்டு அதிர்ந்து போனார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் புகாரளிக்க, போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்