தன் கனவு பைக்கை வாங்க காசு மூட்டையை தூக்கி வந்த இளைஞர் - 3 மணி நேரம் எண்ணி சோர்ந்து போன ஊழியர்கள்

x

ஆந்திர மாநிலம் திருப்பதியில், பத்து ரூபாய் நாணயங்களை மூட்டைகளில் கட்டி கொண்டு வந்து இளைஞர் ஒருவர் தமது பிறந்த நாளில் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.

தனுக்கு நகரை சேர்ந்த ராகவேந்திரா என்ற இளைஞர் தமக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிளை ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.

அப்போது, ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் பத்து ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக வரவழைத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்