திருவாரூரில் இன்று கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்

x

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்

திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தில், இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கருணாநிதி முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இன்று திறந்து வைக்கிறார். மேலும், கருணாநிதி சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, முதல்வர் மு.க ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தினை பார்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்