அரசுப் பேருந்தில் பெரிய ஓட்டை... சிறுவர்கள் சிக்கினால் உயிருக்கே ஆபத்து தான் - அச்சத்தில் பயணிகள்

x

அரசுப் பேருந்தில் பெரிய ஓட்டை... சிறுவர்கள் சிக்கினால் உயிருக்கே ஆபத்து தான் - அச்சத்தில் பயணிகள்

தக்கலையிலிருந்து முளகுமூடு, கோழிப் போர்விளை, பூக்கடை வழியாக கருங்கல் பகுதிக்கும், அங்கிருந்து மீண்டும் தக்கலைக்கும் இந்த அரசுப் பேருந்து இயங்கி வருகிறது.

இந்தப் பேருந்தில் பயணிகள் இருக்கையின் கீழே தரைதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறிய அளவிலான துவாரம் ஏற்பட்டது.

அத்துளை சரி செய்யப்படாததால் துவாரம் பெரிதாகியுள்ளது.

பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது சிறுவர்கள் யாரேனும் துவாரத்திற்குள் சிக்கினால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்