அலீயா பட் குடும்பத்திற்கு விழுந்த பெரிய இடி - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

x

பட்டியல் இனத்தவருக்கு ஒ01துக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்ற வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு அப்போதைய ஆட்சியர், ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என நிபந்தனையும் விதித்திருந்தார். ஆனால், பலரிடம் கைமாறிய அந்த நிலத்தை, கல்லூரி வாசல் திரைப்படத்தில் கதாநாகியாக நடித்த பூஜா பட், கடந்த 1990-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா பட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்