கரும்பு வெட்ட ஆந்திரா சென்ற நபர்... சில நாட்களாக திடீரென துண்டிக்கப்பட்ட செல்போன் பேச்சு - சடலமாக திரும்பியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி

x

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின். 38 வயதான இவர், ஆந்திராவுக்கு கரும்பு வெட்ட சென்ற நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தன் குடும்பத்தினரிடம் தினமும் செல்போனில் பேசி வந்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக திடீரென செல்போன் பேச்சு துண்டிக்கப்பட்டதால் அதிர்ந்து போன குடும்பத்தினர் என்னவென்று தெரியாமல் இருந்தனர்.

இந்த சூழலில் திடீரென ஸ்டாலினின் சடலத்தை சிலர் காரில் எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்த நிலையில் அதை பார்த்த அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

மரணத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்