திருப்பதி கோயில் முன் போகிப் பண்டிகை கொண்டாட்டம்..!

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தான நிர்வாகம் சார்பில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருமலை ஏழுமலையான் கோவில் முன், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை தீயிட்டு, போகியை கொண்டாடினர்.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்