ஊட்டியில் நடந்த தவக்கால பரிகார பவனி... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

x

ஊட்டியில் நடந்த தவக்கால பரிகார பவனியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 'ஈஸ்டர்' பண்டிகையை முன்னிட்டு தவக்காலத்தின் 5-ஆவது ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் தவக்கால பரிகார பவனி நடைப்பெற்றது. ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தொடங்கிய பவனி, மருத்துவமனை சாலை, கூட்ஷெட், மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தல் வழியாக குருசடி திருத்தலத்தை அடைந்தது. அங்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலகில் அமைதி நிலவவும், கொடிய நோய்கள் உலகை விட்டு அகலவும், பொது தேர்வு எழுதும் மாணவர்களுகாகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்