முகம் தெரியாத கடும் பணியிலும் கலங்காத பாரத் ஜோடோ யாத்திரை | bharat jodo yatra | rahul gandhi

அரியானாவில் முகம் தெரியாத அளவுக்கு கடும் குளிர் இருந்த போதும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் கர்னால் அருகே ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. முகம் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்திருந்த போதிலும், வாகனங்களின் முகப்பு ஒளியுடன், இசைக்கருவிகளை வாசித்தப்படி நடைபயணம் தொடர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com