என்ஐஏ ரெய்டில் சிக்கிய பிஎஃப்ஐ ஆவணங்கள்

x

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது ஹவாலா பணம், நன்கொடைகள் மூலம் நிதி திரட்டுதல், பயங்கரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பிஎஃப்ஐ நிறுவனத்துக்கு சொந்தமான 39 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி 20 பேரை கைது செய்தனர்.

இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்