BF.7 கொரோனா பரவல் எதிரொலி.. நாளை காலை 10 மணி முதல் பரிசோதனை - தமிழக சுகாதாரத்துறை அதிரடி முடிவு

x

தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்தில் நான்கு விமான நிலையங்கள்

BF 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க ,சீனா, ஜெர்மனி, இட்டாலி, பிரான்ஸ், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளை, பரிசோதனை செய்ய, பொது சுகாதாரத்துறை முடிவு.

இதில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையத்தில், நாளை காலை 10 மணி முதல், தொற்றை கண்டறிய வேண்டிய பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

விமான பயனிகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்