காட்டிக்கொடுத்த ATM கேமரா.. வடமாநிலத்தவரை தட்டி தூக்கிய போலீஸ்.. சென்னையில் பரபரப்பு

x

சென்னை மேடவாக்கத்தில், ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்மில், வடமாநில இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இதனை கண்காணிப்பு கேமாரா மூலம் பார்த்த வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மனோஜ்குமார் என்பவரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்