மாயமான இளைஞரை கண்டுபிடிப்பதற்குள் குளிக்க இறங்கிய சுற்றுலா பயணிகள் விரட்டி விரட்டி வெளுத்த ஊர் மக்கள்

x

கன்னியாகுமரி அருகே அணையில் மூழ்கி மாயமான கேரளா இளைஞரை தேடும் பணி, போதிய வெளிச்சம் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வழிச்சால் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் தனது நண்பர்களோடு குமரி மாவட்டத்திலுள்ள சிற்றாறு அணைப்பகுதியில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். பின்னர் தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் தேடியும் பிரதீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லாததால், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே தடையை மீறி அணைப்பகுதியில் குளித்தவர்களை அப்பகுதி மக்கள் வெளியேற கூறியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் வெடித்து கைகலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்