2 ஆண்டுகள் படுத்த படுக்கை - நகரவே முடியாமல் தவித்த மாணவி - இன்று முதல்வருக்கு நடந்தே வந்து நன்றி! - தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி

x

சென்னை கோடம்பாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து, சிகிச்சை பெற்று வந்த மாணவி சிந்து குணமடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கோடம்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி சிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததால், 2 கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. சிந்துவின் முகத்தின் தாடை மற்றும் பற்கள் உடைந்தன. 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்திற்கு தூக்கி சென்றார். இந்த செய்தியறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்வு எழுத ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டார். அவர் தேர்வு எழுதி முடித்த பின்பு, அவருக்கு அரசு செலவில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவி சிந்து குணமடைந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்