வீட்டின் கதவை அடித்து உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள் - பீதியில் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர், கக்காசாச்சி நகர் பகுதியில் இரவு நேரங்களில் மூன்று கரடிகள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு உணவு தேடி வந்த கரடி ஒன்று அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் கதவை உடைக்க முயற்சித்துள்ளது. அது முடியாமல் போகவே அருகில் இருந்த ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்ததுடன் அரிசி, சர்க்கரை, உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சென்றுள்ளது. நல்வாய்ப்பாக ரவிச்சந்திரன் குடும்பத்தினர் தாயார் வீட்டிற்கு சென்றிருந்ததால் கரடியிடமிருந்து தப்பித்துள்ளனர். கரடிகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்