"எல்லா இடமும் நம்ம இடம் தான் பாஸ்"... கோயில் அருகே உலா வந்த கரடி...

x

"எல்லா இடமும் நம்ம இடம் தான் பாஸ்"... கோயில் அருகே உலா வந்த கரடி...


கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அருகே கரடி உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியில் உள்ள கோயில் முன்பு கரடி ஒன்று உலா வந்தது. அதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்