மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு - அமெரிக்காவில் பயங்கரம்

மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு - அமெரிக்காவில் பயங்கரம்
x

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனை வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுல்சா பகுதியில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென்று அங்கிருந்த நோயாளிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 பேர் சம்பவ உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பலியான நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்ற நோக்கில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்