தொழிலதிபரை கடத்தி சென்ற கும்பல்.. உடனே மனைவிக்கு கொடுத்த க்ளூ - நடுவழியில் காத்திருந்த ஆப்பு

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் பிரமுகரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
  • பர்கூரை அடுத்த பாலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
  • காலையில் வெளியே சென்ற பாபு வீடு திரும்பாததால் அவருடைய மனைவி ராஜேஸ்வரி தேடினார்.
  • அப்போது, மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பாபு, தன்னை சிலர் காரில் கடத்திக் கொண்டு புதுச்சேரிக்கு செல்வதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
  • இதையடுத்து, ராஜேஸ்வரி, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • அதைத் தொடர்ந்து, பாபுவின் செல்போன் எண்ணை வைத்து, பின்தொடர்ந்து வந்த போலீசார், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் அவர்களின் காரை மடக்கி பிடித்தனர்.
  • விசாரணையில், பாபுவை கடத்தியவர் பெயர் சக்திவேல் என்பது தெரியவந்தது. தன்னிடம் வாங்கிய 98 லட்ச ரூபாயைத் திருப்பித் தராமல் இருந்ததால் பாபுவை கடத்தியதாக சக்திவேல் கூறினார்.
  • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்