"காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு தடை" நெல்லை அருகே திசையன்விளையில் போலீசார் குவிப்பு

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பனங்காட்டு படை கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், விழா பந்தல் மேடைகளை அகற்ற வேண்டும் என்றும், வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்