வேலூரில் வீட்டில் கிடந்த பைக்குக்கு தி.மலை போலீஸ் போட்ட ஃபைன் -SMS-ஐ பார்த்து அதிர்ந்த வங்கி மேலாளர்

x

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் முகிலன். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது, திருவண்ணாமலை போக்குவரத்து போலீசாரால் தனது இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு வந்த குறுந்தகவலை கண்டு முகிலன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதேபோல் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கும் முகிலன், தான் திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்று தெரவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்