ஜேசிபி - யால் அகற்றிய வளையல் கடை - நடுரோட்டிலே கதறி அழுத உரிமையாளர்

x

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நடைபாதை கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நடைபாதை கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வள்ளி என்பவரின் வளையல் கடையை அகற்ற தாமதமானதால், நகராட்சி ஊழியர்கள் கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதைக் கண்ட கடையின் உரிமையாளர் வள்ளி, சாலையில் அமர்ந்து கதறி அழுததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்