கர்நாடகாவில் இட ஒதுக்கீடு விவகாரம்.. அம்பேத்கர் சிலை அருகே மடாதிபதி தற்கொலை முயற்சி

x
  • கர்நாடகாவில் சமீபத்தில் அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஷிக்காவ் தொகுதியில், பஞ்சார சமூகத்தை சேர்ந்த குண்டூர் பஞ்சராபீட திப்பேஸ்வர சுவாமி தலைமையில், இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்
  • அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த மடாதிபதி திடீரென பொது இடத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
  • இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இது வரை மக்கள் போராட்டமாக இருந்து வந்த சூழலில் தற்போது மடாதிபதிகளும் களம் இறங்க தொடங்கியுள்ளதால் பாஜகவிற்கு வரும் தேர்தலில் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்