நள்ளிரவில் வலம் வரும் கொள்ளை கும்பல்... ஹை டெக் திருடர்களுக்கு வலை வீசிய போலீஸ்...

x

காஞ்சிவரம் அடுத்துள்ளது ஜினகாஞ்சி நகர் பகுதி. புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த பகுதியின் மையத்தில் இருக்கும் இந்த வீடு அருள் என்பவருக்கு சொந்தமானது. கடந்த சில தினங்களுக்கு முன் அருள் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினரோடு வெளியூருக்குச் சென்றிருக்கிறார். ஊரில் இருந்து வீடு திரும்பிய அருளுக்கு காத்திருந்தது பேர் அதிர்ச்சி.வீட்டின் கதவுகள் உடைக்கபட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கபட்டிருக்கிறது.நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரனையை தொடங்கிய போது தான் இதே போல அந்த பகுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கிறது.அருளின் வீட்டில் கொள்ளை நடந்தது போலவே மாரியப்பன் என்பவரின் வீட்டிலும் கொள்ளை அரங்கேறியிருக்கிறது .மாரியப்பன் ஊருக்குச் சென்ற நேரம் பார்த்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தங்க நகை மற்றும், வெள்ளி பொருட்களோட்டு சேர்ந்து 1 லட்சம் ரூபாய் பணத்தையும் அபேஸ் செய்திருக்கிறார்கள்.

உடனாடியாக அலார்ட் ஆன போலீஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது தான் இந்த இரு கொள்ளைகளையும் செய்தது ஒரே திருடர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு விலையுயர்ந்த பைக்கிள் ஹெல்மெட், ஜர்கின், என பந்தாவாக உடையனிந்து கையில் கத்தியோடு ஊருக்குள் வலம் வந்திருக்கிறது அந்த கும்பல். நேராக குறி வைத்திருக்கும் வீட்டிற்கு முன் வந்து நின்ற அந்த திருடர்கள், ஒருவர் வெளியில் இருந்து பார்த்துக் கொள்ள மற்றொருவர் சலனமே இல்லாம் வீட்டிற்குள் சென்று கொள்ளையடித்திருக்கிறார்.. யார் வீட்டில் ஆள் இல்லை என்பதை அந்த கும்பல் முன்பே தெரிந்து வைத்துத்திருப்பதால், பகல் பொழுதில் பல நாட்களாக நோட்டம் விட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்திருக்கிறார்கள்..இதனால் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் கொள்ளையர்களை தீவிரமக தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்