மறைந்த முலாயமுக்கு பத்ம விபூஷண்; வாணி ஜெயராம்-க்கு பத்ம பூஷன்; 'ஆஸ்கர்' நாயகன் கீரவாணிக்கு பத்மஸ்ரீ ... கோலாகலமாக முடிந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா

x
  • டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
  • அதன்படி, தமிழகத்தை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை, அவரது சகோதரி உமா பெற்றக்கொண்டார்.
  • இதேபோல், சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை பாலம் கல்யாணசுந்தரம் பெற்றக்கொண்டார்.
  • மறைந்த முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கான பத்ம விபூஷன் விருதை, அவரின் மகனும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்.
  • மேலும் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்