"சிக்கன எடுத்து பார்க்குறேன்.. வாடை மூஞ்சி வரை அடிக்கிது".. பிரபல ஹோட்டலில் பகீர்.. பிரியாணி பிரியர்களே உஷார்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் கெட்டுப் போன சிக்கன் வழங்கியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சித்திரங்கோடு பகுதியை சேர்ந்த விஜு தனது மனைவியுடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் உணவகத்திற்கு பிரியாண சாப்பிட சென்றுள்ளார். அப்போது, அங்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்ட போது, அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படும் நிலையில், அந்த தம்பதியினர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, தங்களிடம் வந்து புகார் அளிக்காமல், அங்கு வர முடியாது என அதிகாரியும் அலட்சியமாக பதில் கூறியதாக விஜு குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்