வளர்ப்பு நாய்க்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு - அழகு பார்த்த உரிமையாளர்

x

சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்திய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓலையாம்புதூரை சேர்ந்த சேகர், மாரியம்மாள் தம்பதியினர் 4 ஆண்டுகளாக சே-சீ என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாய் கர்ப்பமாக இருந்ததால் வளைகாப்பு நடத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்களை அழைத்த மாரியம்மாள் பூ, பழங்களை வைத்து, நாய்க்கு நலங்கு சுற்றி வளைகாப்பு நடத்தினர்.

சே-சீயை குடும்ப உறுப்பினராக நினைத்து வளர்த்து வருவதால், வளைகாப்பு செய்ததாக மாரியம்மாள் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்