நரிக்குறவ பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி - திருச்செந்தூர் கோயில் அருகே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

பிழைப்பு தேடி திருச்செந்தூருக்கு வந்த நரிக்குறவர் சமூக மக்கள் நாழிக்கிணறு அருகே கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இருப்பினும், அடிப்படை தேவையான வீடு இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறனர்.

இந்நிலையில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு, அவரின் உறவினர்கள் கோயில் அருகே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

எனவே, தங்களுக்கென குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்