தாய் கண் முன்னே நடந்த கொடூரம்... - தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கி குழந்தை பலி

x

நாமக்கல் அருகே தாயின் கண்ணெதிரே தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.

இவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், இவரது தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனிஷா தேவி என்ற தம்பதியினர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் தீஷ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், சம்பவத்தன்று குழந்தையை மடியில் வைத்து கொண்டே மனிஷா தேவி வேலை பார்த்துள்ளார்.

அப்போது, திடீரென இயந்திரத்தின் பெல்ட்டை பிடித்த குழந்தை, இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்