சளி, காய்ச்சலால் அனுபதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமக உயிரிழப்பு! மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 6 மாத குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அனுமதித்த குழந்தைக்கு மருத்துவர், செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறினார்கள்.

குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்