கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தை... வறுமையின் பிடி.. பிரிந்து சென்ற கணவர் - முதலமைச்சர் உத்தரவுப்படி வந்த குட் நியூஸ்

கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தை... வறுமையின் பிடி.. பிரிந்து சென்ற கணவர் - முதலமைச்சர் உத்தரவுப்படி வந்த குட் நியூஸ்
x

மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவருக்கு அண்மையில் கை, கால்கள் இன்றி குழந்தை பிறந்தது. இதனால் அவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், மூன்று குழந்தைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கி ராணி தவித்து வந்தார்.

இது தந்தி‌ டிவியில் செய்தியாக ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக முதலமைச்சர் உத்தரவுப்படி ராணிக்கு, கஞ்சாநகரம் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்

. இதனை பெற்றுக்கொண்ட ராணி, தந்தி டிவிக்கும், தமிழக முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்