ரூபாய் நோட்டுகளால் மிளிரும் ஐயப்பன் - துதி பாடி பக்தர்கள் வழிபாடு

x

வாணியம்பாடியில் ஐயப்பன் சுவாமிக்கு 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது . திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில், பிரசித்த பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஐயப்ப சுவாமிக்கு, ஐயப்ப பக்தர்கள் விரதமிருக்கும் 48 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அந்தவகையில் இன்று, 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு, ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்