50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பக்தர்களின் வேன்...ஐயப்பனை தரிசித்து திரும்பிய போது நேர்ந்த சோகம் - 10 பேரின் நிலை என்ன?

x

கேரள மாநிலம் இடுக்கியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு, வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, வேன் இடுக்கி தோக்குபாறை அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்