சாதனை மாணவர்களுக்கு விருது.."கல்வி ஒரு தலைமுறையே காக்கும்" நடிகர் சூர்யா,கார்த்திக் அதிரடி பேச்சு..

x

வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை என்றும், கல்வி மூலமாக வாழ்க்கையை பயில வேண்டும் என்றும் நடிகர் சூர்யா கூறி உள்ளார்.

நடிகர் சிவக்குமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் நிகழ்வு அகரம் பவுண்டேஷன் சார்பில் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற, நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை என்றார். முன்னதாகப் பேசிய நடிகர் கார்த்தி, ஒருவர் படித்தால் ஒரு தலைமுறையே நன்றாக இருக்கும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்