திருப்பூரில் வட மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை தாக்கினார்களா? உண்மை என்ன? - கமிஷனர் விளக்கம்

x

திருப்பூரில், தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர்கள் ஓட, ஓட விரட்டி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அனுப்பர்பாளையம் பகுதியில், தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், வடமாநில இளைஞர்கள் சிலருக்கும் இடையே சிகரெட் பிடித்து புகை விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


அதனைத் தொடர்ந்து, திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள், வடமாநில இளைஞர்கள் பணிபுரியும் பனியன் நிறுவனத்திற்கு சென்றதாகவும் அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


அப்போது, வடமாநிலத்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, பெல்ட், மரக்கிளைகள் உள்ளிட்டவற்றுடன் தமிழக இளைஞர்களை துரத்தி தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்