திருப்பத்தூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்

x

வாணியம்பாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோர் ஓட்டுநர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் காவேரிபட்டு பகுதியில் இருந்து 10 பெண் தொழிலாளர்கள், காலனி தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து இழுத்துச் செல்லப்பட்டு மினி வேன் மீது மோதியது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

6 பெண் தொழிலாளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்