ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்தவர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம் - சென்னையில் பயங்கர சம்பவம்

x

சென்னை புதுவண்ணாரப் பேட்டையில், தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மோகன் என்கிற பல்லு மோகன், கல்யாண பந்தல் சமையல் ஆர்டர் எடுத்து வேலை செய்து வந்துள்ளார். கோயில் திருவிழாவில் பந்தல் போடுவதற்காக, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள முருகன் கோயிலில் பந்தல் போட்டுள்ளார். பணி முடிந்த நிலையில், இரவு நேரம் என்பதால், அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோவில் படுத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில், ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மோகன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது கூட்டாளி சிவா ஆகிய இருவரும் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், மணிகண்டன் தொழில் போட்டி காரணமாக மோகனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்