வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ - நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்து

x

மதுரையில் வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் படுகாயமடைந்தனர். ராஜேஷ் கண்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநர், மதுரை தத்தனேரி பகுதியில் இருந்து மேல வைத்தியநாதபுரத்திற்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்றுள்ளார். அப்போது, சாலையின் நடுவே திடீரென நாய் ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் பிரேக் அடித்த நிலையில், ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்