ஆஸ்திரேலியா VS தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி - ஷேவாக் கடும் விமர்சனம்

x

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வெறும் ஒன்றரை நாளிலேயே முடிவுக்கு வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்பேன் ஆடுகளம் முழுவதும் பச்சைப்புற்கள் நிரம்பிய நிலையில், வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனை விமர்சித்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஷேவாக், ஒன்றரை நாளில் டெஸ்ட் போட்டியை முடித்துள்ள ஆஸ்திரேலிய அணிதான் மைதானம் தயாரிப்பது குறித்து பாடம் எடுப்பதாகவும், இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என குற்றம் சுமத்துவார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்