பவர் ஃபுலாக இருக்கும் ஆஸி..ஃபுல் சொதப்பலில் இந்திய அணி..WTC அப்டேட்

x

லண்டனில் நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 296 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.


மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ரகானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்