ஏலச்சீட்டு நகை, பணம் திருடு போன சோகம்.. SP அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிப்பு - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இரவுப் பணியில் இருந்த காவலர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். 80 சதவீத காயங்களுடன் இருக்கும் அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தனது பெயர் விருதகிரி என்றும், ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்காக வாங்கி வைத்திருந்த தங்க நாணயங்களை தனது சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் சேர்ந்து எடுத்துக் கொண்டதாகவும், இதனால் ஏற்பட்ட வேதனையில் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்