திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு..

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, இன்று மற்றும் நாளை முன்பதிவு செய்து டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே திருமலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

நேற்று இரவு வரை மட்டும், சுமார் 2 லட்சம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, அலிபிரி சோதனைச் சாவடி அருகே வாகனங்களை நிறுத்த அன்றைய தினத்திற்கும் மற்றும் அடுத்த நாளுக்கான டோக்கன்கள் இருந்தால் மட்டும் திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்