பயணிகள் கவனத்திற்கு... ரயில் உணவு குறித்து மத்திய அமைச்சர் கொடுத்த வார்னிங்..!

x

கடந்த 7 மாதங்களில், ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பாக, 5 ஆயிரத்து 869 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய அவர், ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எழும் புகார்கள் மீது ஐ.ஆர்.சி.டி.சி. நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சேவை வழங்குநருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளின் படி தரமான, சுகாதாரமான மற்றும் சுவையான உணவுகளை வழங்க, ஐ.ஆர்.சி.டி.சி. முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்