கலெக்டர் ஆபிசில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பான கடலூர்

x

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை கேட்புக் கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளி மகனுடன் வந்த பெற்றோர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தாய், மனைவி மற்றும் மாற்றுத் திறனாளி மகனுடன் வந்த வீரசிங்கன்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், முன்விரோதம் காரணமாக தன்னை ஊருக்குள் அனுமதிப்பதில்லை என்று கூறினார். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக அவர் கூறினார். அவருடைய புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்