ATM இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி - பாதியில் ஓட்டம் பிடித்த கும்பல்

x

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல், இயந்திரத்தை முழுவதுமாக அப்புறப்படுத்த முடியாமல் பாதியிலே விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவன ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் இயந்திரத்தை சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இயந்திரத்தை முழுவதுமாக அப்புறப்படுத்த முடியாமல் பாதியிலே விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, காலையில் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க வந்த பொது மக்கள் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்துள்ளனர். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்