சென்னை ரயிலை கவிழ்க்க முயற்சி.. நூலிழையில் தப்பித்த பல உயிர்கள்

x

திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தென்னை மர துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 6ம் தேதி நள்ளிரவு அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி ரயில் இன்ஜினை ஓட்டி சென்ற மதியழகன், திருநின்றவூர் - நெமிலிச்சேரி அருகே ரயில் தண்டவாளத்தில் 5 அடி நீளமுள்ள தென்னை மரத்துண்டு ஒன்று கிடந்ததை கண்டுபிடித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் சக்கரத்தில் சிக்கிய மரத் துண்டை, அகற்றிய ஓட்டுநர் மதியழகன், அதனை ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், திருநின்றவூரில் ரயில்வே தண்டவாளம் அருகே சுற்றித்திரிந்த பாபு என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத் துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றது பாபு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ரயில்வே சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்