சொத்துக்காக முன்னாள் ராணுவ வீரரை கொல்ல முயற்சி - முன்னாள் ராணுவ வீரரின் மனைவி உள்பட 4 பேர் கைது

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டிபாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து மீது, சில தினங்களுக்கு முன்னர் மூன்று பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், அவரது இடது கை துண்டானது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மாரிமுத்துவை பிரிந்து வாழும் அவரது மனைவி கவிதா, சொத்துக்காக தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாரிமுத்துவை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து கவிதா, அவரது கள்ளக்காதலன் சங்கர், மேலும் முன்னள் ராணுவ வீரரை கொல்ல முயன்ற பாபு, பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு நபரான அப்புவையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்