லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் இங்கிலாந்துக்கு மௌனத்தால் இந்தியா பதிலடி?

x

லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்இங்கிலாந்துக்கு மௌனத்தால் இந்தியா பதிலடி?

பஞ்சாபில் உள்ள அம்ரித் பால் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத நபரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள சீக்கியர்கள், இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயரதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில் இந்திய தூதரகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இங்கிலாந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா நிறுத்தி வைத்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்