ஆந்திராவில் தமிழர்கள் மீதான தாக்குதல் - "இனவெறி கொண்டு தாக்குதல்" சீமான் குற்றச்சாட்டு

x

ஆந்திராவில் தமிழர்கள் மீதான தாக்குதல் - "இனவெறி கொண்டு தாக்குதல்" சீமான் குற்றச்சாட்டு

ஆந்திராவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்த கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு அவர்கள் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள சீமான், தாக்குதல் தொடுத்த குண்டர்களை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், ஆந்திராவிலுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்